பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து (திறனடைந்து, வல்லமையைப் பெற்று) ..... பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். (அப்போஸ்தலர் 1: 8) பரிசுத்த ஆவியானவர் இன்று பூமியில் பரலோக ராஜ்ய ஆளுநராகத் திகழ்கிறார். அவர் நாம் இயேசு ராஜாவினித்தமும் அவரது இராஜ்ஜியத்தினிமித்தமும் பிரகாசிக்கிர சாட்சிகளாயிருப்பதற்கு எம்மை பெலனடையச் செய்கிறார். இதினிமித்தமாக, நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்போது எமது வாழ்க்கையில் நம்பிக்கை, சுகம், பரிபூரணம், சந்தோஷம், சமாதானம் கொண்டுவரப்படுகிறது. சத்திய ஆவியானவராகிய அவரே நமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவை கற்றுத்தருகிறார். இந்தச் சத்தியம் எமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து எம்மை விடுதலையாக்குகிறது. நீதியின் பாதைகளில் எமது வாழ்க்கைப் படகை ஓட்டுவதற்கான ஞானத்தை அவர் நமக்குத் தந்தருளுகிறார். இவ்விதமாக, பரிசுத்த ஆவியானவர் இராஜ்ய அரசாங்க அதிகாரதிற்கூடாக எமக்கு நியாயத்தைக் கொண்டுவரும்போது நாம் பரிபூரணமும், திருப்தியும் அடைகிறோம். ஆதலால், நாம் சாட்சிகளாயிருப்பதற்கும் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து உலகத்தாரைத் தேவனுக்கு ஒப்புரவாக்கவும் அவருடைய திவ்ய வல்ல்மையைத் தந்தருளுகிறார். (2 கொரிந்தியர் 5:18-20)