Friday, 10 July, 2026г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

சூரா அல் அலக் (தமிழ்)surah al alaq

சூரா அல் அலக் (தமிழ்)surah al alaqУ вашего броузера проблема в совместимости с HTML5
♥♥♥♥ Sheikh Mishary bin Rashid bin Gharib bin Muhammad Alafasy  ♥♥♥♥  الشيخ مشاري بن راشد بن غريب بن محمد العفاسي‎ ♥♥♥♥ https://m.youtube.com/user/hudashams0 ♥♥♥♥ http://theruh.blogspot.com/?m=1 ♥♥♥♥ quran recitation [குர்ஆன் கிராஅத்]: http://www.youtube.com/playlist?list=PLaVlxJXNww5VZU2-pS6-t85n9l5UpUNq7 ♥♥♥♥ டாக்டர் ஜாகீர் நாயக் தமிழ் பயான்கள் Dr zakirnaik Tamil: http://www.youtube.com/playlist?list=PLaVlxJXNww5V_fZiPJb5qFH7SaT_qEufL ♥♥♥♥ முஜாஹித் இப்னு ரஸீன்[mujaheeth ibnu naseen]: http://www.youtube.com/playlist?list=PLaVlxJXNww5U66ReJMg30APRhhUOmYVDK " #ஓரு #மனிதன் #இன்னொரு #மனிதனிடம் #வந்து . . . . . . அல்லாஹ் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்கலோடு வைத்திருக்கிறான்... ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன்... இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை.. என்று சலித்துக் கொண்டான் . . . மனிதன் 2 : " நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு. மனிதன் 1 : " இல்லை " முடியாது... மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன்.உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு. மனிதன் 1 : " இல்லை " முடியாது... மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு . . மனிதன் 1 : நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது... மனிதன் 2 : அல்லாஹ் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த நியமத்துகனை தந்துயிருக்கிறான். ஆனால் அதற்கு நன்றி செலுத்தாமல்... இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை... என்று சலிக்கின்றாயே ? ? ? எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்... அல்ஹம்துலில்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்... அவன் தான் அல்லாஹ்....!!! பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கு உணவு வழங்குபவன்... கடலில் உள்ள திமிங்கலதிற்கு ஒரு நாளைக்கு 33 டன் அதாவது, 36,960 கிலோ மீன்களை உணவு வழங்குகிறான்... சுப்ஹானல்லாஹ்.... உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்... "அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்... "இன்னும் சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான்... இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்... ஆக , ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று... கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவா சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று... உங்களைப் படைத்து, ரிஜ்க் அளித்து பரிபாலிக்கக்கூடிய ரப்பை அவனுடைய அடிப்படையை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்... அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து... "நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய்... எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்... அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து... நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய்... எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்... அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து.... நீ உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றாய்... எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்... அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து... நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய்... எத்தனையோ மண்ணறைவாசிகள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர்... அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து... நீ உனது தேவைகளை முறையிட்டு வணங்குவற்கு உனக்கொரு இறைவன் இருக்கின்றான்... எத்தனையோ பேர் கல்லுக்கும் மண்ணுக்கும் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்... அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து... நீ நீயாக இருக்கின்றாய்... எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்... அல்லாஹ்விற்கே நன்றி செலுத்து நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாக பிறந்ததற்கு... எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இரு... அல்லாஹ்விற்கு நன்றி செலுத்து... பிறரை மகிழ்வி.... ஸூரத்துத் தீன் 95 வது அத்தியாயம். . ! لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்... (அல்குர்ஆன் : 95:4) செல்வம், இன்பம், துன்பம் கஸ்டம், நோய்,வறுமை அனைத்துமே அல்லாஹ்வுடைய அருள் என்ற என்னத்தோடும் நம்பிக்கையோடும் வாழ ஒவ்வொருவரும் பழகிக் கொள்ள வேண்டும்
Мой аккаунт