தெய்வம் எதற்கு வேண்டும்..?
மனிதன் பிறக்கிறபோது பிரசவம் ஆச்சா என்று கேட்கிறோம். சவம் என்றால் பிணம் அல்லவா..? அப்படி அதை அழைக்கலாமா...? ஆம் அப்படி அழைப்பதற்கு ஒரு ஞாயம் இருக்கிறது, அதாவது கருவறையில் இருக்கும்போது பேச்சு, மூச்சு இல்லாமலிருந்து வெளியே
வந்தபின் பேச்சு மூச்சு வருவதினாலும், இறுதியில் இவனை சவமாக்க பிறவிப்பினி என்ற எமன் அதுநேரம் முதல் இவன் தலையில் காத்துக்கொண்டு இருக்கிறதினாலும் அப்படிச் சொன்னது.
அந்த ஆபத்தை விட்டு நீங்கவேண்டும்
என்பதற்காகத்தான் அவனுக்கு ஒரு தெய்வத்தின் பெயரை எடுத்து வைக்கிறார்கள். தனக்கு வைக்கப்பெற்ற அந்த தெய்வப் பெயருக்குள் ஆகும் தகுதியைத் தன் வாழ்நாளில் ஒருவன் சம்பாதித்துக்கொள்ளவில்லை
என்றால் தலைமேல் காத்துக்கொண்டு இருக்கும் கோரமாகிய எமன் கைப்போட்டுவிடுவான், உடனே இவனுக்கு வைக்கப்பெற்ற தெய்வப் பெயர் போய் சவம் என்ற நிலைக்கு நிசமாகவே ஆகிவிடுவான்.
அப்படி ஆகாமல் தப்பிக்கவேதான் செயலுடைய ஒரு மெய்யான தெய்வம்
இவனுக்கு கட்டாயம் வேண்டும் .
இல்லா விட்டால் இவனை நாசம் செய்ய
இவனுக்குள்ளேயே காத்துக்கொண்டு இருக்கும் எமன், தீட்டை வெளியாக்கி நரகவாதி என்ற தீர்ப்புக்கு ஆக்கி விடுவான் பிறகு இவன் கதி என்ன...?
இவன் பெண்டு, பிள்ளை, உற்றார், உறவினர்கள் எல்லோரும் இவன் கட்டிய வீட்டிலேயே இருந்துகொண்டு, இவன் வாங்கிக்கொடுத்த துனியைக் கட்டிக்கொண்டு, அப்பா நாங்கள் நல்லா இருக்கனும், நீ இங்கே வந்துவிடாதே
என்று சொல்வதோடு, சானிச் சட்டியைக் கரைத்து வை, பொறியை இறை, எள்ளைத் தெளி, தூக்கு தூக்கு, சீக்கிரம் தூக்கு என்கிறார்கள்.
இன்னும் பிணத்தைப் பார்த்தாலே தீட்டு, இழவைக் கேட்டாலே தீட்டு, குளி என்று சொல்லுகிறார்களே, இவனைப்
பற்றிக் கேள்விப்படுவதே அவ்வளவு கொடுமையான தீட்டு என்று இருந்தால் இவன் அடையப்போகும் அதோகதி எப்படிப்பட் மகா கோரமானதாக இருக்கும்..?
அந்தப் பேராபத்து வராமல் இருக்க எவ்வளவு எச்சரிக்கையாக இருந்து ஒரு நிஜமான தெய்வத் துணையைத் தேடிக்கொள்ளவேண்டும். அந்த தெய்வத்தின் கையில்தான் சாகாக்கலையாகிய இப் பிரம்மவித்தை நிஜச்செயல் விளங்கி நிற்கிறது.
பிறவிப் பிணியாகிய எமவாதையில் சிக்கி, நாற்றிச்செத்து, அலகையாகி, நரகத்திற்கு ஆளாகும் பேராபத்திலிருந்து மனிதனை மீட்டு, பரமபதத்திற்கு ஆளாக்கும் அரிய, பெரிய செயலுக்குத்தான் தெய்வம் வேண்டும்.
சர்வ உலகத்திலும் இந்த வல்லமை பெற்ற ஒரே மெய்ச்செயலுடைய தெய்வம் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் மட்டுமே.
வேறு எங்கு சென்றாலும், யாரை சரனடைந்தாலும், எத்தனை கோவில்குளம் சென்றாலும், எந்த வேத சாஸ்திரத்தை படித்தாலும், எத்தனை கோடி மந்திரம் ஜெபித்தாலும் வீணே..!!
நீயும் இப்பிறவி எடுத்தது வீணே...!!
தாயின் கருவரையில் பேசுச்சு மூச்சற்ற சவமாக இருந்து, பிறந்து, மீண்டும் சவம் ஆவதற்கு நீ பிறக்காமலேயே இருந்திருக்கலாமே..!!
....மனுவே உஜார்.....
- மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் -