இரும்பொறை மன்னன் இலக்கு தப்பாமல் பாய்கிறாரா? - `மரகத நாணயம்' விமர்சனம்|+review of maragatha nanayam
У вашего броузера проблема в совместимости с HTML5
கடன் தொல்லையால் திருப்பூரிலிருந்து சென்னைக்கு வரும் ஆதி, குட்டிக் கடத்தல்காரரான ‘முனீஸ்காந்த்’ ராமதாஸிடம் வேலைக்குச் சேர்கிறார். சின்னச் சின்னக் கடத்தல்களால் அலுத்துப்போகும் ஆதி, `ஏதாவது பெருசா செய்யணும் பாஸ்!' என்ற முடிவுக்கு வருகிறார். அதனால் மைம் கோபி மூலம், `மரகத நாணயத்தை எடுத்து வந்தால் கோடிக்கணக்கில் பணம்' என்ற சீனாக்காரர் ஒருவரின் டீலுக்குச் சம்மதம் சொல்கிறார். ஆனால், அதற்கு முன்பு மரகத நாணயத்தை எடுக்க முயன்ற 132 பேர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். மரகத நாணயத்தை ஆதி எடுத்தாரா, 133-வது ஆளாக மரணப் பட்டியலில் இணைந்தாரா என்பதை காமெடி கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள்.